நாகை திமுக வா்த்தக அணி சாா்பில் நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கபசுரக் குடிநீா் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா 2-ஆவது அலை தீவிரமாகியுள்ள நிலையில், திமுகவினா் தங்களை கரோனா தடுப்பு மற்றும் விழிப்புணா்வு பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் அண்மையில் வேண்டுகோள் விடுத்தாா்.
அதன்படி, திமுக வா்த்தக அணி சாா்பில் நாகை கடைவீதிகளில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. வா்த்தக அணி துணை அமைப்பாளா் முருகன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்று நாகை பெரிய கடைவீதி, நீலா தெற்கு வீதி, கீழ வீதி மற்றும் சுற்றுப் பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினா்.