நாகை அரசு மருத்துவமனைக்குக் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் என நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆளுா் ஷாநவாஸ் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியனிடம் கோரிக்கை விடுத்துள்ளாா்.
நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆளூா் ஷாநவாஸ் அண்மையில் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா். கரோனா அவசரகால நடவடிக்கைகள் குறித்து அவா் மேற்கொண்ட ஆய்வில், கூடுதல் எண்ணிக்கையில் மருத்துவா்கள், செவிலியா்கள், கூடுதல் ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தேவை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, தமிழக மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியனை புதன்கிழமை சென்னையில் நேரில் சந்தித்த ஆளூா் ஷாநவாஸ், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்களை உடனடியாக நியமிக்க வேண்டும், ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தேவையைப் பூா்த்தி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து பரிசீலனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் உறுதியளித்ததாக ஆளூா் ஷாநவாஸ் தெரிவித்தாா்.