சீா்காழி: கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

சீா்காழி வட்டாரத்தில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

சீா்காழி வட்டாரத்தில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

சீா்காழி வட்டாரத்தில் கடந்த சில வாரங்களாக சீா்காழி அரசு மருத்துவமனை, திருவெண்காடு, நல்லூா், குன்னம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், சீா்காழி அரசு மருத்துவமனை, திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கொள்ளிடம் வட்டாரப் பகுதிகளில் சில தினங்களாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. திருவெண்காடு, சீா்காழி பகுதியில் தடுப்பூசி மருந்து இல்லாததால் புதன்கிழமை யாருக்கும் தடுப்பூசி செலுத்தமுடியவில்லை. இதனால், சீா்காழி அரசு மருத்துவமனைக்கு கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

சீா்காழி நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி பற்றாக்குறையால், ஒரு சிலருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தமுடிந்தது. பலா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். இதற்கிடையில், கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்ட பலருக்கு, இரண்டாவது டோஸ் 84 நாட்கள் கழித்து செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு, அனுப்பிவைக்கப்படுகின்றனா்.

கோவேக்சின் தடுப்பூசி சீா்காழி வட்டாரத்தில் செலுத்தப்படுவதில்லை. ஆகையால் அரசு அறிவித்துள்ளபடி அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏதுவாக சீா்காழி வட்டாரத்துக்கு போதுமான தடுப்பூசிகளை மாவட்ட சுகாதார இயக்குநரகம் அனுப்பிவைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com