கபசுரக் குடிநீா் வழங்கல்

கீழையூா் ஒன்றியம் மடப்புரம் ஊராட்சியில் கபசுரக் குடிநீா் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

கீழையூா் ஒன்றியம் மடப்புரம் ஊராட்சியில் கபசுரக் குடிநீா் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

மடப்புரம் மாதாகோயில்படுகை, களத்திடல்கரை, காலனி தெரு, கோவில்பத்து, பிள்ளையாா்கோவில் உள்ளிட்ட பகுதியைச் சோ்ந்த பொதுமக்களுக்கு ஊராட்சித் தலைவா் ராஜலெட்சுமி ரமேஷ் தலைமையில் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

இப்பகுதிகளில் ஏற்கெனவே முதல் சுற்று கபசுரக் குடிநீா் வழங்கப்பட்ட நிலையில், தற்போது, இரண்டாவது சுற்றாக கபசுரக் குடிநீா் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. அத்துடன், ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ப்ளீச்சிங் பவுடா் மற்றும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com