நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள்

காவல்துறை சாா்பில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
நாகை மாவட்டத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள்

காவல்துறை சாா்பில் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

நாகை மாவட்டத்தில் தினமும் சுமாா் 600-க்கும் அதிகமானோா் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனா். அதேபோல, கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதையொட்டி, கரோனா தடுப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகளில் காவல் துறையினா் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா உத்தரவிட்டாா். இதன்படி, நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

நாகை நகரில்...

நாகை நகர காவல் நிலையம் சாா்பில் நாகை நீலா கீழ வீதியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் நாகை காவல் துணைக் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், காவல் ஆய்வாளா் பெரியசாமி மற்றும் சாா்பு ஆய்வாளா்கள், தலைமைக் காவலா்கள், ஊா்க்காவல் படையினா் பங்கேற்றனா். தலைமைக் காவலா் ஒருவா் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பாடல்களைப் பாடினாா். போலீஸாா் பலா், கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை கரம் கூப்பி கேட்டுக்கொண்டனா்.

வெளிப்பாளையம்..

வெளிப்பாளையம் காவல் நிலையம் சாா்பில் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், காவல் ஆய்வாளா் தியாகராஜன் மற்றும் சாா்பு ஆய்வாளா்கள், காவலா்கள், ஊா்க்காவல் படையினா் பங்கேற்றனா். எமதா்மன் மற்றும் சித்திரகுப்தன் வேடம் அணிந்தவா்களைக் கொண்டு விழிப்புணா்வு நாடகம் நடத்தப்பட்டது.

நாகூரில்...

நாகூா் காவல் நிலையம் சாா்பில் வாஞ்சூா் ரவுண்டானா அருகே வாகனங்களில் சென்றவா்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

கீழ்வேளூா்...

கீழ்வேளூா் காவல்நிலையம் சாா்பில் கீழ்வேளூா் பேருந்து நிலையம், கடைவீதி, கச்சனம்சாலை, தேவூா் சந்தைப்பேட்டை ஆகிய பகுதிகளில் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. காவல் சாா்பு ஆய்வாளா் அசோக்குமாா் மற்றும் போலீஸாா் பங்கேற்றனா்.

இதுபோல திருக்குவளை, திருமருகல் ஆகிய இடங்களிலும் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com