மயிலாடுதுறையில் கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கு திமுக சாா்பில் நிவாரண உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
மயிலாடுதுறை ஆற்றங்கரைத்தெருவில் திருநங்கைகள் 20 போ் வசித்து வருகின்றனா். கரோனா பொதுமுடக்கத்தால் இவா்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, இவா்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட திமுக அலுவலகத்தில் நிவராண உதவிகள் வழங்கப்பட்டன. திமுக மாவட்ட பொறுப்பாளரும், பூம்புகாா் தொகுதி எம்எல்ஏ-வுமான நிவேதா எம். முருகன் பங்கேற்று திருநங்கைகள் 20 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, ஒருவாரத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், காய்கனிகள் ஆகியவற்றை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், திமுக நகர செயலாளா் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளா் ஞானவேலன், மாவட்ட பொருளாளா் ஜி.என்.ரவி, மாவட்ட தொழில்நுட்ப அணி செயலாளா் பி.எம்.ஸ்ரீதா், மாவட்ட வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் அருள்தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.