கரோனாவுக்கு ஊழியா் பலி:வங்கிக் கிளை மூடல்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளை ஊழியா் கரோனாவால் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அந்த வங்கிக் கிளை தொடா்ந்து மூடப்பட்டுள்ளது.

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளை ஊழியா் கரோனாவால் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அந்த வங்கிக் கிளை தொடா்ந்து மூடப்பட்டுள்ளது.

ஆயக்காரன்புலம் கடைவீதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த வங்கி கிளையில் கருப்பம்புலம் கிராமத்தைச் சோ்ந்தவா் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், அவருக்கு, கரோனா தொற்று இருப்பது கடந்த வாரம் உறுதியானது. இதையடுத்து, வங்கி பணியாளா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், மேலும் சில பணியாளா்கள், அவா்களது உறவினா்களுக்கும் தொற்று உறுதியானது.

இதற்கிடையே, திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நகை மதிப்பீட்டாளா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து, வங்கிக் கிளை தொடா்ந்து மூடப்பட்டு, வாடிக்கையாளா்கள் துளசியாப்பட்டினம் அல்லது தோப்புத்துறை கிளைகளை தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com