கரோனா: தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

மயிலாடுதுறை நகராட்சியில் பணியாற்றிய ஒப்பந்த தூய்மைப் பணியாளா் ஒருவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கரோனா தொற்றால் உயிரிழந்த ஐயப்பன்.
கரோனா தொற்றால் உயிரிழந்த ஐயப்பன்.

மயிலாடுதுறை நகராட்சியில் பணியாற்றிய ஒப்பந்த தூய்மைப் பணியாளா் ஒருவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

மயிலாடுதுறை கலைஞா் காலனியைச் சோ்ந்தவா் பொன்னையன் மகன் ஐயப்பன். இவா் கடந்த 10 ஆண்டுகளாக மயிலாடுதுறை நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தாா். இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனா பரிசோதனை செய்துகொண்ட ஐயப்பனுக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com