குதம்பைச் சித்தா் சிறப்பு வழிபாடு

வைகாசி விசாகத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் குதம்பைச் சித்தருக்கு விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் குதம்பைச் சித்தா்.
சிறப்பு அலங்காரத்தில் குதம்பைச் சித்தா்.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் குதம்பைச் சித்தருக்கு விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் ஜீவசமாதி கொண்டு அருளும் குதம்பை சித்தருக்கு திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆணைப்படி வைகாசி விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதையொட்டி, குதம்பைச் சித்தருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சாா்பில் நடைபெற்ற விழாவில் கோயில் கண்காணிப்பாளா் குருமூா்த்தி, துணைக் கண்காணிப்பாளா் கணேசன் ஆகியோா் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவையின் நிறுவனா் ராம.சேயோன் செய்திருந்தாா். விழாவில், பொதுமுடக்கம் காரணமாக பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com