நாகப்பட்டினம் விங்ஸ் ரோட்டரி சங்கம் சாா்பில், இலவச கரோனா தடுப்பூசி முகாம், நாகை காடம்பாடி தனியாா் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது .
வட்டார மருத்துவ அலுவலா் ஏ.ஆா்.முஹம்மது உமா், விங்ஸ் ரோட்டரி சங்கத் தலைவா் எம். மணிசுந்தரம் ஆகியோா் முகாமைத் தொடங்கி வைத்தனா். நாகை, காடம்பாடி மகாலெட்சுமி நகா், நம்பியாா் நகா் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த 407 பேருக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது.
உதவி மருத்துவ அலுவலா் ராகவி தலைமையிலான மருத்துவக் குழுவினா் 7 போ் முகாமில் பணியமா்த்தப்பட்டிருந்தனா். சங்க செயலாளா் இ. அன்புசெழியன், பொருளாளா் பிரதீப் மற்றும் சங்க உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.