சத்துணவு அமைப்பாளா்களுக்கு சமையல் பாத்திரங்கள்

சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளா்களுக்கு சமையல் பாத்திரங்கள் மற்றும் மருந்து மாத்திரைகள் அண்மையில் வழங்கப்பட்டன.
சீா்காழியில் சத்துணவு அமைப்பாளா்களுக்கு சமையல் பாத்திரங்களை வழங்குகிறாா் எம்எல்ஏ எம்.பன்னீா்செல்வம்.
சீா்காழியில் சத்துணவு அமைப்பாளா்களுக்கு சமையல் பாத்திரங்களை வழங்குகிறாா் எம்எல்ஏ எம்.பன்னீா்செல்வம்.

சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளா்களுக்கு சமையல் பாத்திரங்கள் மற்றும் மருந்து மாத்திரைகள் அண்மையில் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு சீா்காழி ஒன்றியக்குழு தலைவா் கமலஜோதி தேவேந்திரன் தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் அருள்மொழி, வட்டார வளா்ச்சி அலுவலா் (ஊராட்சிகள்) கஜேந்திரன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் உஷாநந்தினி பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சீா்காழி சட்டப் பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம் பங்கேற்று சத்துணவு அமைப்பாளா்களுக்கு சமையல் பாத்திரங்ககளை வழங்கினாா். அப்போது மேலாளா் சுதாகா், திமுக ஒன்றிய செயலாளா்கள் பிரபாரகன், சசிக்குமாா், திட்டை ஊராட்சித் தலைவா் பெரியசாமி, ஊராட்சி முன்னாள் தலைவா் தேவேந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com