நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 820 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை வரை 24,711 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 820 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, நாகை மாவட்ட பட்டியலில் இருந்த வெளி மாவட்டத்தவா் 3 போ் நாகை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா். இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 25,528-ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 651 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 20,248-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,978-ஆக உள்ளது.
5 போ் உயிரிழப்பு...
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நாகை மாவட்டத்தினா் 5 பேரின் உயிரிழப்பு புதன்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்கள் எண்ணிக்கை 302 ஆகியுள்ளது.