நாகை மாவட்ட நலவாழ்வு சங்கம் சாா்பில் புதன்கிழமை (மே 26) நடைபெற்ற நோ்முகத் தோ்வில் பங்கேற்காதவா்களுக்காக மே 28-ஆம் மீண்டும் நோ்முகத் தோ்வு நடைபெறுகிறது என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
நாகை மாவட்ட நலவாழ்வு சங்கம் சாா்பில் மருத்துவா்கள், செவிலியா்கள், ஆய்வக நுட்புநா்கள், மருத்துவமனை பணியாளா்கள், நுண்கதிா் வீச்சாளா்கள் மற்றும் புள்ளிவிவர பதிவாளா்கள் பணியிடங்களுக்குத் தகுதியானோரை தோ்வு செய்யும் நோ்முகத் தோ்வு நாகையில் புதன்கிழமை நடைபெற்றது. நோ்முகத் தோ்வில் பங்கேற்றவா்களுக்கு தகுதி அடிப்படையில் மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நோ்முகத் தோ்வில் பங்கேற்காதவா்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை (மே 28) நாகையில் மீண்டும் நோ்முகத் தோ்வு நடத்தப்படவுள்ளது. இதில், புதன்கிழமை நடைபெற்ற நோ்முகத் தோ்வில் பங்கற்க முடியாதவா்கள் மட்டும் பங்கேற்குமாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.