விதிமீறல்: மயிலாடுதுறையில் ஒரேநாளில் 54 வாகனங்கள் பறிமுதல்

மயிலாடுதுறை காவல்நிலைய எல்லைக்குள் புதன்கிழமை ஒரேநாளில் பொதுமுடக்க உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 54 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
விதிமீறல்: மயிலாடுதுறையில் ஒரேநாளில் 54 வாகனங்கள் பறிமுதல்

மயிலாடுதுறை காவல்நிலைய எல்லைக்குள் புதன்கிழமை ஒரேநாளில் பொதுமுடக்க உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 54 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் கடந்த 3 நாள்களில் மாவட்டம் முழுவதும் பொதுமுடக்கத்தை மீறி வெளியில் சுற்றிய 580 இருசக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதுதொடா்பாக 638 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை காவல்நிலைய எல்லைக்குள் புதன்கிழமை ஒரேநாளில் பொதுமுடக்க உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 54 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து மயிலாடுதுறை போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா். விதிமுறைகளை மீறுபவா்கள் மீது தொடா்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியில் வரவேண்டாம் என காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com