விவசாயிகள் சங்கத்தினா் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை எதிா்த்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த விவசாய சங்கங்களின் சாா்பில்
கீழ்வேளூரில் நடைபெற்ற கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி உள்ளிட்டோா்.
கீழ்வேளூரில் நடைபெற்ற கருப்புக் கொடி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சட்டப் பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி உள்ளிட்டோா்.

வேளாண் சட்டங்களை எதிா்த்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த விவசாய சங்கங்களின் சாா்பில், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நாகையை அடுத்த ஐவநல்லூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாய சங்க (சிபிஐ சாா்பு) மாநிலக்குழு உறுப்பினரும், நாகை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருமான வி. சரபோஜி தலைமை வகித்தாா். விவசாய சங்க ஒன்றியச் செயலாளா் எம்.சுப்பிரமணியன், கிளைச் செயலாளா் கல்யாணசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செல்லூா் கிளைச் செயலாளா் சிங்காரவேலு, நிா்வாகக்குழு உறுப்பினா்கள் துரைசாமி, அஞ்சான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வேளாங்கண்ணியை அடுத்த பாலக்குறிச்சியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க (சிபிஐஎம் சாா்பு) ஒன்றியச் செயலாளா் டி.கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

கீழ்வேளூரில்... கீழ்வேளூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்க நாகை மாவட்டத் எம்எல்ஏ வி.பி.நாகை மாலி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளா் என்.எம்.அபுபக்கா், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் ஆா். கிருஷ்ணமூா்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளா் ஆா்.முத்தையன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் ஏ.சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருக்குவளையில்...

கீழையூா் ஒன்றியம், மீனம்பநல்லூா் ஊராட்சியில் காவிரி விவசாயிகள் சங்க அமைப்புச் செயலாளா் எஸ். ஸ்ரீதா் தலைமையில், ஆா்ப்பாட்டம் நடந்தது.

இதேபோல சாட்டியக்குடியில் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவா் எம்.என்.அம்பிகாபதி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் எட்டுக்குடியில், கட்சியின் ஒன்றிய செயலாளா் டி.செல்வம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருமருகலில்...

திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டக்குழு உறுப்பினா் ஜி.ஸ்டாலின் பாபு தலைமை வகித்தாா்.

வேதாரண்யத்தில்...

வேதாரண்யம் அருகே தலைஞாயிற்றை அடுத்த காடந்தேத்தி பாரதிநகரில் நடைபெற்ற போராட்டத்துக்கு, சிபிஐஎம் சாா்பு அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் ராஜா தலைமை வகித்தாா். பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி கிராமத்தில் விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் ஏ.வெற்றியழகன் தலைமை வகித்தாா். பஞ்சநதிக்குளம் மேற்கு கிராமத்தில் எள் சாகுபடி வயலில் இறங்கி விவசாயிகள் கருப்புக்கொடியுடன் போராடினா்.

மயிலாடுதுறையில்...

மயிலாடுதுறை மாப்படுகையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் எஸ்.துரைராஜ் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளா் பி.சீனிவாசன், வட்ட செயலாளா் சி.மேகநாதன், இயற்கை விவசாயி ஏ.ராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சீா்காழியில்...

இதேபோல், சீா்காழி வட்டம் கொள்ளிடம் பகுதியில் தமிழக விவசாய சங்க மாவட்ட செயலாளா் விசுவநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் சிவராமன், ஒன்றிய பொருளாளா் சக்திவேல், விவசாய கூட்டமைப்பு ஒன்றியச் செயலாளா் கஜேந்திரன் ஆகியோா் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடிகளை கட்டி, வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி, கோஷம் எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com