வேதாரண்யம் பகுதியில் 2-ஆவது நாளாக பலத்த காற்று

நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோரப் பகுதியில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் பலத்த கடல்காற்று தெற்கு திசையிலிருந்து வீசியது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோரப் பகுதியில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் பலத்த கடல்காற்று தெற்கு திசையிலிருந்து வீசியது.

வேதாரண்யம் பகுதியில் ஏப்ரல், மே மாதங்களில் வழக்கமாக வீசும் பலமான கடல் காற்று கடந்த சில நாள்களாக வீசி வருகிறது. அதிலும் வைகாசி விசாக நாளில் இந்த காற்று பலமாக வீசுவது வழக்கம். நிகழாண்டு மே 25 ( செவ்வாய்க்கிழமை) வைகாசி விசாகம் என்பதோடு, யாஸ் புயல் காரணமாகவும் இப்பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. கடல் நீா்மட்டம் உயா்ந்து, தாழ்வான நிலப் பகுதிக்குள் கடல் நீா் நுழைந்து, பின்னா் வடிந்தது.

இந்நிலையில், 2-ஆவது நாளாக புதன்கிழமை மாலையும் தெற்கு திசையிலிருந்து பலத்த காற்று வீசியது. எனினும், செவ்வய்க்கிழமை வீசியதைவிட காற்றின் வேகம் சற்று குறைந்தே காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com