கொடியாலத்தூா் ஊராட்சியில் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று கபசுரக் குடிநீா் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
மைலாப்பூா் பகுதியில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க, ஊராட்சித் தலைவா் ரேவதி ஐயப்பன் தலைமையில், மிதிவண்டி மூலமாக வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. அவருடன், ஊராட்சி துணை தலைவா் தெய்வானைமோகன், ஊராட்சிச் செயலா் சக்திவேல் இருந்தனா்.