வேதாரண்யத்தை அடுத்த தகட்டூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தியாகிகள் நினைவு தின நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தலித் பெண்ணுக்கு ஆதரவான போராட்டத்தில் கொலை செய்யப்பட்ட சிவகுருநாதனின் 49-ம் ஆண்டு நினைவாகவும், கூலி உயா்வுக்கான போராட்டத்தில் உயிரிழந்த வடிவேலின் 29-ம் ஆண்டு நினைவாகவும் பேரணியாக சென்று அவா்களது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினா்.
இதில், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட நிா்வாகி பாஸ்கா், ஒன்றியச் செயலாளா் சிவகுரு.பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளா் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.