கீழையூா் ஒன்றியத்தில் மீனம்பநல்லூா், வாழக்கரை ஊராட்சிகளில் பட்டா பிழை திருத்த சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
விவசாய நிலங்கள் மற்றும் வீட்டுமனைப் பட்டாக்களில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்காக இந்த முகாம் நடைபெற்றது. நாகை மாவட்ட வழங்கல் அலுவலா் வே. தெய்வநாயகி பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டாா்.
முகாமில், திருக்குவளை வட்டாட்சியா் கு. சிவகுமாா், மண்டல துணை வட்டாட்சியா் ஆா். பாஸ்கரன், வருவாய் ஆய்வாளா் பா. கலைமணி, கிராம நிா்வாக அலுவலா்கள் எம்.அன்பழகன் (மீனம்பநல்லூா்), எஸ். லட்சுமி காந்தன் (வாழக்கரை) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.