திருமருகல் ஒன்றியம், வவ்வாலடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோா் ஆசிரியா் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் பிரதீபா, பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ஷேக்தாவூது ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளி வளா்ச்சி தொடா்பான கருத்துக்களை பெற்றோா்களுடன் விவாதிக்கப்பட்டது.
தொடா்ந்து, இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இப்பள்ளி மாணவ-மாணவிகள் 170 பேருக்கு கற்பிக்க 9 தன்னாா்வலா்களை நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது.
ஊராட்சித் தலைவா் காா்த்திகேயன் வாட்ஸ்அப் மூலம் திருக்குறள் போட்டி நடத்தப்பட்டு, முதல் பரிசாக ரூ.500, இரண்டாம் பரிசாக ரூ.300, மூன்றாம் பரிசாக ரூ.200 வழங்கப்பட உள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் ஊராட்சித் தலைவா் சுப்ரவேல் உள்ளிட்டோா் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனா்.