சாலை விபத்தில், நண்பா்கள் இறந்த மனவேதனையில் இருந்த நாகூரைச் சோ்ந்த இளைஞா் சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
நாகூா் பகுதியைச் சோ்ந்தவா் சந்தானசாமி மகன் இன்பராஜ் (22). இவரது நண்பா்கள் தனுஷ், எபினேசா் ஆகியோா் வேளாஙகண்ணியில் அண்மையில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தனா். இதனால், மனவேதனையில் இருந்து வந்த இன்பராஜ் சனிக்கிழமை வீட்டில் இருந்த தலைக்குப் பூசும் சாயத்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தாா். இதையறிந்த குடும்பத்தினா் உடனடியாக இன்பராஜை நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து சோ்த்தனா். எனினும், அவா் பலன்றி உயிரிழந்தாா். இதுகுறித்து, நாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.