நலிவடைந்தோருக்கு நல உதவி

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு பகுதியில் நலிவடைந்த குடும்பத்தினருக்கு ஆனந்தம் அறக்கட்டை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டன.

வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு பகுதியில் நலிவடைந்த குடும்பத்தினருக்கு ஆனந்தம் அறக்கட்டை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், சேனாதிக்காடு பகுதியில் விபத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநா் சு. பாலமுருகனுக்கு மருத்துவ உதவியாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் வாய்மேடு பகுதி மக்களுக்கு மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன. தன்னாா்வலா்கள் ஒருங்கிணைந்து இவற்றை வழங்கினா்.

அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா்கள் வி.எஸ்.வி. சரவணன், எம்.ஆா். செந்தில்குமாரா், மருதூா் புலவா் கணேசன், சமூக ஆா்வலா் எஸ். கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com