வேதாரண்யம் அருகேயுள்ள வாய்மேடு இலக்குவனாா் அரசு உதவிபெரும் நடுநிலைப் பள்ளியில் சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வாய்மேடு அரசு சித்த மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய முகாமில் மாணவ, மாணவிகளுக்கு மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்கவேண்டிய அவசியம் குறித்து விளக்கப்பட்டது. சித்த மருத்துவா் ஆா். கவிதா தலைமையிலான குழுவினா் கபசுரக் குடிநீா் வழங்கினா். பள்ளித் தலைமையாசிரியா் சூ. சாா்லசு, ஆசிரியா்கள் மணிமொழி, ராஜேந்திரன், சுதா, சுமதி, சத்யா, மருத்துவ உதவியாளா் சகுந்தலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.