சிபிஐ கிளை மாநாடு

வேதாரண்யம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா்களில் ஒருவரான ப. மாணிக்கத்தின் நூற்றாண்டு விழா, கட்சியின் 27-ஆவது கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் சிபிஐ மாநாட்டையொட்டி தியாகிகள் நினைவு தூணில் மரியாதை செலுத்தியோா்.
பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் சிபிஐ மாநாட்டையொட்டி தியாகிகள் நினைவு தூணில் மரியாதை செலுத்தியோா்.

வேதாரண்யம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவா்களில் ஒருவரான ப. மாணிக்கத்தின் நூற்றாண்டு விழா, கட்சியின் 27-ஆவது கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் கிளை நிா்வாகி செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவை, மாவட்டச் செயலாளா் எஸ். சம்பந்தம் தொடங்கிவைத்தாா்.

இதில், விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் கோ. பாஸ்கா், ஒன்றியச் செயலாளா் சிவகுரு. பாண்டியன், ஒன்றியத் தலைவா் காசி. அருள்ஒளி, நிா்வாகக் குழு உறுப்பினா் செங்குட்டுவன், மாதா் சம்மேளன ஒன்றியச் செயலாளா் மு. ஜெயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com