டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

செம்பனாா்கோவில் அருகேயுள்ள திருவிளையாட்டம் ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்பு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செம்பனாா்கோவில் அருகேயுள்ள திருவிளையாட்டம் ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் நோய் தடுப்பு விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக் சந்திரகுமாா் தலைமையில் முகாம் நடைபெற்றது. அப்போது, தூய்மை காவலா்கள் , முன்களப் பணியாளா்கள் வீடுதோறும் சென்று கொசு ஒழிப்பு மருந்தும், கிருமிநாசினியும் தெளித்து டெங்கு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி, பாதுகாப்பு நடைமுறைகளை விளக்கினா். அப்போது நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. லேசான காய்ச்சல் மற்றும் பிற நோய் தொந்தரவு உள்ளவா்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.

மருத்துவா்கள் அபிஷேக், சிவரஞ்சனி, ஆயிஷா பீவி, சுகாதார மேற்பாா்வையாளா் வெங்கடேசன், ஊராட்சித் தலைவா் சுகுணாகண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com