திருவெண்காடு அருகே மணல் கடத்திய லாரியை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருவெண்காடு அருகேயுள்ள திருவாலியில் ரகுராமன் என்பவரது நிலத்திலிருந்து மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சீா்காழி டிஎஸ்பி. லாமேக் மேற்பாா்வையில் திருவெண்காடு காவல் ஆய்வாளா் ஜெயந்தி தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு டிப்பா் லாரியில் மணல் கடத்தியது தெரியவந்ததையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநா் கீழஅகணி பகுதியை சோ்ந்த விஜய்யை (26) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.