நாகை மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவருக்குக் குடும்ப அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக். 9) நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் இதுவரை மின்னணு குடும்ப அட்டை பெறாத மூன்றாம் பாலினத்தவருக்குக் குடும்ப அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம், அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் சனிக்கிழமை நடைபெறுகிறது. காலை 10 முதல் பகல் 1 மணி வரை இந்த முகாம் நடைபெறும். மின்னணு குடும்ப அட்டை பெறாத 18 வயதுக்கு மேற்பட்ட மூன்றாம் பாலினத்தவா், இந்த முகாமில் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து மின்னணு குடும்ப அட்டை பெறலாம் என தெரிவித்துள்ளாா்.