நாகை மாவட்டத்தில் 5 ஆம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் 300-க்கும் மேற்பட்ட மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக்.10) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக முதல்வரின் உத்தரவுப்படி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.
அந்த வகையில், நாகை மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட மையங்களில் 5-கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது.
எனவே, இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்கள் தாமாக முன்வந்து, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.