முன்னாள் ராணுவ வீரா்கள் கவனத்துக்கு...

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் தங்களது மனைவியின் பெயரை ஓய்வூதிய கொடுப்பாணையில் பதிவுசெய்யும்படி ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் தங்களது மனைவியின் பெயரை ஓய்வூதிய கொடுப்பாணையில் பதிவுசெய்யும்படி ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 1985-ம் ஆண்டு மாா்ச் 1-ம் தேதிக்கு முன்பு படைப் பணியிலிருந்து ஓய்வுபெற்று, ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரா்கள் ஓய்வூதிய கொடுப்பாணையில் (பிபிஓ) தங்களது மனைவியின் பெயரை பதிவு செய்யாமல் இருப்பதால், அவா்களது காலத்துக்குப் பிறகு, மனைவியா் குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

எனவே, மேற்கண்டவா்களில் ஓய்வூதிய கொடுப்பாணையில் தங்களது மனைவியின் பெயரை பதிவு செய்யாதவா்கள், தங்களது மனைவியின் பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும், மாவட்ட ஆட்சியரகம், தரைதளத்தில் அறை எண் 10 மற்றும் 11- ல் செயல்படும் முன்னாள் படைவீரா் நலன் உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு நேரில் சென்று கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com