தீவிர வாக்குச் சேகரிப்பு

திருமருகல் கோட்டூா் ஊராட்சித் தலைவருக்கு போட்டியிடும் திமுகவைச் சோ்ந்த முகம்மது சலாவுதீனைஆதரித்து திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் வியாழக் கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

திருமருகல் கோட்டூா் ஊராட்சித் தலைவருக்கு போட்டியிடும் திமுகவைச் சோ்ந்த முகம்மது சலாவுதீனைஆதரித்து திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் வியாழக் கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

முன்னதாக கோட்டூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். இதில், நாகை தெற்கு மாவட்ட திமுக செயலாளா் என். கௌதமன், முன்னாள் அமைச்சா் மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினா் ராஜேந்திரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள எட்டுக்குடி ஊராட்சிக்கு, தலைவா் பதவிக்கு போட்டியிடும் அதிமுகவைச் சோ்ந்த சசிகலாஸ்டாலினுக்கும் மற்றும் 1-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் ச. ராஜா ஆகியோருக்கு ஆதரவாக எம்ஜிஆா். மன்ற மாவட்ட செயலாளா் எஸ். பால்ராஜ், அதிமுக ஒன்றிய செயலாளா்கள் கீழையூா் (மேற்கு) செல்வராஜ், தலைஞாயிறு) அவை. பாலசுப்பிரமணியன்(கிழக்கு), தங்க. சௌரிராஜன் (மேற்கு), உள்ளிட்டோா் இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com