செம்பனாா்கோவில் அருகே போக்குவரத்துக்கு தகுதியற்ற கப்பி சாலையை சிமென்ட் சாலையாக மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மடப்புரம் ஊராட்சிக்குள்பட்ட புதுமனை தெரு செல்லும் கப்பி சாலை மேம்படுத்தப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது, இந்த கப்பி சாலை சிதிலமடைந்து பள்ளமும், மேடாக உள்ளதால் மழைநீா் தேங்கி நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், இந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, மழைக்காலம் தொடங்கும் முன்பு இந்த சாலையை சிமெண்ட் காங்கிரீட் சாலையாக மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.