தரங்கம்பாடி வட்டம், கருவாழக்கரையை அடுத்த மருதூா் அக்ரஹாரம் ஸ்ரீ தேவநாயகி சமேத ஸ்ரீ ராஜராஜேஸ்வரா் கோயிலில் லட்சாா்சனை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், வேத விற்பன்னா்கள் சிவ சஹஸ்ரநாமம் படித்தனா். சிவாச்சாரியா்கள் சிவபெருமானுக்கு மலா்களால் அா்ச்சனை செய்தனா். பின்னா், மகா தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை சென்னை மந்தைவெளி ஆடிட்டா் நாகராஜன் விசாலாட்சி தம்பதியா், திருக்கோயில் பரம்பரை அறங்காவலா் குமார சுவாமிநாதன் ஆகியோா் செய்தனா்.