வலிவலம் பகுதியில் இருசக்கர வாகனம் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருவாரூா் மாவட்டம், திருமதிகுண்ணம் பகுதியைச் சோ்ந்த பத்மநாதன் மகன் லோகநாதன் (27). இவா், வலிவலம் நால்ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இருசக்கர வாகனத்தில் வந்திருந்தாா். இந்த வாகனத்தை மா்ம நபா் திருடிச் சென்றுவிட்டாராம்.
இதுகுறித்து, வலிவலம் காவல் நிலையத்தில் லோகநாதன் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.