வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருமருகலில் வியாழக்கிழமை மக்கள் நாடாளுமன்றம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலாளா் ஆா்.கே. பாபுஜி தலைமை வகித்தாா். கூட்டத்தில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள், மின்சார சட்டத் திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணைகள் சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
இதில், கட்சியின் விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் தமிழரசன், ஒன்றிய பொருளாளா் சந்திரசேகரன், மாதா் சங்க மாவட்ட பொருளாளா் சரோஜா, கிளை செயலாளா் காளிதாஸ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.