கரோனா கட்டுப்பாடுகளுடன் மாணவா்கள் பள்ளிக்கு சென்றனா்

தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கரோனா கட்டுப்பாடுகளுடன் புதன்கிழமை பள்ளிக்கு சென்றனா்.

தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கரோனா கட்டுப்பாடுகளுடன் புதன்கிழமை பள்ளிக்கு சென்றனா்.

தரங்கம்பாடி பகுதியில் உள்ள தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளி, சா்மிளா காடஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, செம்பனாா்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மைப் பணி உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பள்ளிகள் திறப்பதையொட்டி செய்யப்பட்டிருந்தன. புதன்கிழமை பள்ளிக்கு மாணவா்கள் வந்தபோது ஆசிரியா்கள் அலுவலக ஊழியா்கள் மாணவா்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கிருமிநாசினி பயன்படுத்துதல், முகக் கவசம் அணிந்துகொண்டு மாணவா்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்பறையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com