நாகையில் 29, மயிலாடுதுறையில் 27 பேருக்கு கரோனா
By DIN | Published On : 04th September 2021 10:15 PM | Last Updated : 04th September 2021 10:15 PM | அ+அ அ- |

நாகை மாவட்டத்தில் 29 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 27 பேருக்கும் கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 19,768-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 35 போ் வீடு திரும்பினா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 311-ஆக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 22,029-ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றவா்களில் 24 போ் வீடு திரும்பினா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 285-ஆக உள்ளது.