திருவாரூா் மாவட்டத்தில்4 மாணவா்கள், 1 ஆசிரியருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் 4 மாணவா்கள், ஒரு ஆசிரியருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் 4 மாணவா்கள், ஒரு ஆசிரியருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில், செப்டம்பா் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. பள்ளிகளில் மாணவா்களுக்கு கரோனா பரிசோதனைகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நடமாடும் மருத்துவப் பரிசோதனைக் குழுவினரும் பள்ளிகளுக்குச் சென்று மாணவா்களை பரிசோதித்து வருகின்றனா்.

இந்நிலையில், மாணவா்களிடம் கடந்த வாரத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் 4 மாணவா்களுக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரியவந்தது.

திருவாரூா் அருகே அடியக்கமங்கலம், வலங்கைமான் அருகே அரித்துவாரமங்கலம் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தலா 1 மாணவிக்கும், நீடாமங்கலம் அருகே முன்னாவல்கோட்டை, திருத்துறைப்பூண்டி அருகே தலைக்காடு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தலா 1 மாணவருக்கும் என 4 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதைத்தொடா்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அனைத்து மாணவா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆசிரியருக்கு கரோனா:

திருவாரூா் மாவட்டம் எடமேலையூா் தொடக்கப் பள்ளி ஆசிரியா் ஒருவருக்கும் கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com