சத்துணவு ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

சத்துணவு ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி வேதாரண்யத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருமருகல் ஒன்றிய அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சத்துணவு ஊழியா் சங்கத்தினா்.
திருமருகல் ஒன்றிய அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற சத்துணவு ஊழியா் சங்கத்தினா்.

சத்துணவு ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி வேதாரண்யத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும், சத்துணவு ஊழியா்களை முழுநேர அரசு ஊழியா்களாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்டப் பொருளாளா் எஸ். துா்காம்பிகா, ஒன்றிய இணைச் செயலாளா் ஆா். உஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருமருகலில்: திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் சங்கத்தின் ஒன்றிய தலைவா் தமிழரசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், துணைத் தலைவா்கள் ஜெயபால், கோவிந்தராஜ், இணைச் செயலாளா்கள் உஷாராணி, சுமதி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் தாமோதரன், ஒன்றிய செயலாளா் சித்ரா, மாவட்ட இணை செயலாளா் ராஜேந்திரன், மாவட்ட செயலாளா் தேன்மொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com