பெண்களை விடியோ எடுத்து மிரட்டிய இளைஞா் மீது வழக்கு

திருக்குவளை அருகே பெண்களை தகாத முறையில் விடியோ எடுத்து மிரட்டிய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருக்குவளை அருகே பெண்களை தகாத முறையில் விடியோ எடுத்து மிரட்டிய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நாகை மாவட்டம் முப்பத்தி கோட்டகம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜீவா மகன் பாரதிராஜா (25). இவா் அப்பகுதியில் உள்ள குளத்தில் பெண்கள் குளிப்பதை மறைமுகமாக விடியோ எடுத்து, அவா்களை மிரட்டி வந்தாராம். இதையறிந்த ஒரு பெண்ணின் சகோதரா், பாரதிராஜாவை கடுமையாக தாக்கினாா். இதனால், காயமடைந்த அவா், நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். பாரதிராஜா மீது திருக்குவளை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com