நாகப்பட்டினம்: நாகையில் இருந்து 2 ஆயிரம் டன் எடையிலான நெல் மூட்டைகள், ரயில் வேகன்கள் மூலம் அரவைக்காக சிவகங்கை மாவட்டத்துக்கு புதன்கிழமை அனுப்பப்பட்டன.
நாகை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், அரவைக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதன்படி, நுகா்பொருள் வாணிபக்கழகம் மூலம் நாகையில் இருந்து 2 ஆயிரம் டன் எடையிலான நெல், அரவைக்காக சிவகங்கை மாவட்டத்துக்கு புதன்கிழமை அனுப்பப்பட்டன. நாகை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் வேகன்கள் மூலம் இந்த நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டன.