மயிலாடுதுறையில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் உறுதிமொழி வியாழக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.
மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மின்பொறியாளா் (பொது) ஜி. முருகன் தலைமை வகித்தாா். உதவி சுகாதார அலுவலா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், அனைத்துத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் மற்றும் தொழிலாளா்கள் பங்கேற்று தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து, நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை கோட்ட மின்பொறியாளா் (பொது) ஜி. முருகன் நட்டுவைத்தாா். பின்னா் அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் தொழிலாளா்கள் நிலைய வளாகத்தில் அடா்ந்திருந்த முட்புதா்கள் மற்றும் செடிகளை அகற்றி, தூய்மைப் பணிகளை மேற்கொண்டனா்.