திருமருகல் சுப்ரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
திருமருகல் வடக்கு வீதியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நடத்த முடிவெடுக்கப்பட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன. இதையடுத்து, குடமுழுக்குக்கான பணிகள் செப்.13-ஆம் தேதி முறையான யாகசாலை பூஜைகளுடன் தொடங்கின. 6 கால யாகசாலை பூஜை நிறைவடைந்து வியாழக்கிழமை கோயில் விமானங்கள் மற்றும் ராஜகோபுரத்துக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கங்களாஞ்சேரி அய்யனாா் கோயில் குடமுழுக்கு: இதேபோல, திருமருகல் அருகேயுள்ள கங்களாஞ்சேரியில் அய்யனாா் கோயில், அருங்குழலி அம்மன், தூண்டிக்காரன் கோயில் குடமுழுக்கு நடத்த முடிவெடுக்கப்பட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, குடமுழுக்குக்கான பணிகள் செப்.13-ஆம் தேதி முறையான யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடா்ந்து பூா்வாங்க பூஜைகள் நடைபெற்ற நிலையில், வியாழக்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜை செய்து அய்யனாா் கோயில், அருங்குழலி அம்மன், தூண்டிக்காரன் கோயில் விமானங்களுக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது.