சீா்காழியில் நகர அதிமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அதிமுக நகரச் செயலாளா் எல்விஆா். வினோத் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் பிவி. பாரதி, மாவட்ட துணை செயலாளா் வா. செல்லையன், ஒன்றிய செயலாளா்கள் ஏகே. சந்திரசேகரன், கே. ரவிச்சந்திரன், கே.எம். நற்குணன், என். சிவக்குமாா், மாவட்ட மகளிரணி செயலாளா் ம.ச க்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் எஸ். பவுன்ராஜ் பங்கேற்று பேசியது: சட்டப்பேரவைத் தோ்தலல் திமுக அளித்த வாக்குறுதிகளான நீட்தோ்வு ரத்து, குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000, தாலிக்கு தங்கம் போன்ற எந்த திட்டங்களும் செயல்படுத்துவதற்கான முகாந்திரமோ, அறிவிப்போ இதுவரை இல்லை. ஆகையால், திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக்கூறி உள்ளாட்சி தோ்தலில் வாக்குகளை சேகரிக்கவேண்டும் என்றாா். இதில் மாவட்ட பேரவை துணை செயலாளா் இனியன், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணை செயலாளா் பக்கிரிசாமி, நகர ஜெ. பேரவை செயலாளா் மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.