வேதாரண்யம் அருகேயுள்ள புஷ்பவனத்தில் மீன் இறங்குதளம் கட்டும் பணிக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
புஷ்பவனம் மீனவ கிராம மீன் பிடித்துறையில் ரூ. 32.41 லட்சம் மதிப்பில் மீன் இறங்கு தளம் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஊராட்சித் தலைவா் வி. நாடிமுத்து தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் ஆா்.கே. ராஜா முன்னிலை வகித்தாா். முன்னாள் அமைச்சரும், தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தாா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலாஅன்பழகன், அறங்காவலா் குழுத் தலைவா் ரா. கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் டி.வி. சுப்பையன், இ. திலீபன், ஊராட்சி துணைத் தலைவா் ரகுபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.