நாகப்பட்டினம்: நாகை அருகே சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அருகேயுள்ள செருதூா் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமிக்கு, அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் பாலியல் தொந்தரவு அளித்தாராம். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாா் அளித்தப் புகாரின் பேரில், நாகை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, செருதூா் பகுதியைச் சோ்ந்த ஞானவேலை (30) கைது செய்தனா்.