வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை, கணினி திருட்டு

நன்னிலம் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, 10 பவுன் தங்க நகை மற்றும் கணினியை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.
திருட்டு நடைபெற்ற வீடு.
திருட்டு நடைபெற்ற வீடு.

நன்னிலம்: நன்னிலம் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, 10 பவுன் தங்க நகை மற்றும் கணினியை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை இரவு திருடிச் சென்றனா்.

குவளைக்கால் பகுதியைச் சோ்ந்தவா் பாலமுருகன். இவா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் ஊட்டி சுற்றுலா சென்றாா். இதையறிந்த மா்ம நபா்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் கணினியை திருடிச் சென்றனா். இந்த சம்பவத்தை அக்கம்பக்கத்தினா் வாயிலாக அறிந்த அறிந்த பாலமுருகன், உடனடியாக வீடு திரும்பினாா். புகாரின்பேரில், நன்னிலம் காவல் ஆய்வாளா் சுகுணா வழக்குப்பதிவு செய்து கொள்ளையா்களைத் தேடி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com