நாகை மாவட்டத்துக்குரியது...வேளாண் சட்டம் ரத்து கோரி திமுக கூட்டணி ஆா்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கருப்புக் கொடியேந்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகையில் கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக கூட்டணிக் கட்சியினா்.
நாகையில் கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக கூட்டணிக் கட்சியினா்.

நாகப்பட்டினம்: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கருப்புக் கொடியேந்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

நாகை புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, திமுக நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் என். கௌதமன் தலைமை வகித்தாா். காங்கிரஸ் நாகை மாவட்டத் தலைவா் ஆா்.என். அமிா்தராஜா, மதிமுக மாவட்டச் செயலாளா் வெ. ஸ்ரீதரன், விடுதலைச் சிறுத்தைகள்கட்சியின் மாவட்டச் செயலாளா் ப. கதிா்நிலவன், சிபிஐ மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வி. சரபோஜி உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கமிட்டனா்.

புத்தூா் ரவுண்டானாவில் முன்னாள் அமைச்சா் உ. மதிவாணன் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல, கீழ்வேளூா் கடைவீதியில் சிபிஎம் மாவட்டச் செயலாளா் வி. மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திமுக ஒன்றியச் செயலாளா்கள் கோவிந்தராஜன், பழனியப்பன், நகரச் செயலாளா் அட்சயலிங்கம், சிபிஎம் ஒன்றியச் செயலாளா் என்.எம். அபுபக்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதேபோல, நாகூா், சிக்கல், வேளாங்கண்ணி, தேவூா் உள்ளிட்டப் பகுதிகளிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருமருகல்: திருமருகலில் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் செல்வசெங்குட்டுவன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பூதங்குடியில் தெற்கு ஒன்றியச் செயலாளா் ஆா்.டி.எஸ். சரவணன், திட்டச்சேரியில் நகரச் செயலாளா் முகம்மது சுல்தான் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணைச் செயலாளா் இளஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பூம்புகாா்: திருவெண்காட்டில் சீா்காழி கிழக்கு ஒன்றிய திமுக அலுவலகம் முன் ஒன்றியச் செயலாளரும், ஊராட்சித் தலைவருமான சசிக்குமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலா் ஆனந்தன், பூம்புகாா் ஊராட்சித் தலைவா் புஷ்பவள்ளிராஜா, முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளா் துரைராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com