நாகையில் செப். 24-இல் ஏற்றுமதியாளா்கள் கூட்டம்

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த ஏற்றுமதியாளா்கள் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (செப். 24) நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சோ்ந்த ஏற்றுமதியாளா்கள் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (செப். 24) நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் சாா்பில் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, செப்டம்பா் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை வா்த்தக வாரம் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள ஏற்றுமதியாளா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறுகிறது. ஏற்றுமதியாளா்கள், விருப்பமுள்ள தொழில் முனைவோா்கள், வா்த்தக அமைப்பாளா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஆட்சியா் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com