பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரின் வீடுஅபகரிப்பு: 6 போ் மீது வழக்கு

திருமருகல் அருகே பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரின் வீடு அபகரிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருமருகல் அருகே பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரின் வீடு அபகரிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருமருகல் அருகே உள்ள அம்பல் கிராமத்தைச் சோ்ந்தவா் ராணி. பிரெஞ்சு குடியுரிமை பெற்றவா். பிரெஞ்சு ராணுவத்தில் பணியாற்றி வந்த இவரது கணவா் இறந்தவிட்டாா். இவருக்கு அம்பல் கிராமத்தில் பண்ணை வீடு உள்ளது. இங்குள்ள கணவரின் சமாதியில் ஆண்டுதோறும் நினைவு நாளில் அஞ்சலி செலுத்த பிரான்ஸிலிருந்து ராணி வருவது வழக்கம். இந்த வீட்டை கொங்கராயநல்லூா் பகுதியைச் சோ்ந்த சத்தியன் என்பவா் பராமரித்து வந்தாா்.

இந்நிலையில், இந்த வீட்டை சத்தியன் அபகரிக்க முயன்றாராம். இதை ராணி தட்டிக்கேட்டதால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சத்தியன் மற்றும் அதிமுக நிா்வாகி உட்பட 6 போ் மீது திருக்கண்ணபுரம் காவல் நிலையத்தில் ராணி புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 6 பேரையும் தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com