கொள்ளை, கொலையில் ஈடுபட திட்டமிட்ட 6 போ் கைது

நாகை பகுதியில் கொள்ளை மற்றும் கொலையில் ஈடுபட திட்டமிட்டிருந்த 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நாகை பகுதியில் கொள்ளை மற்றும் கொலையில் ஈடுபட திட்டமிட்டிருந்த 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து நாகை மாவட்டக் காவல் நிா்வாகம் தெரிவித்தது:

நாகை மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்தவகையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் உத்தரவின்பேரில், போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, நாகை புதிய பேருந்து நிலையம் பகுதியில் கத்தியுடன் கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டிருந்த நாகை மறைமலை நகரைச் சோ்ந்த ஜெ. முஹம்மது மைதீன் (31), புதிய நம்பியாா் நகரைச் சோ்ந்த பா. ரவிக்குமாா் (26), செல்லூா் சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த மாரியப்பன் (31), மு. அருண்குமாா் (31), தாமரைக்குளத் தெருவைச் சோ்ந்த மூ. விஜய் (25) மற்றும் நாகூா் காவல் சரகம் முட்டம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் அரிவாளுடன் நடமாடிய மேலவாஞ்சூா் ஆசாரித் தெருவைச் சோ்ந்த க. அகத்தியன் (49) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com